search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோவில் நிர்வாகி"

    சேதராப்பட்டு வேலை தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் ஊழியரை தாக்கிய ஆரோவில் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியில் சர்வதேச நகரமான ஆரோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிமாநில சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்து விட்டு செல்வார்கள்.

    இந்த தியான மண்டபத்துக்கு முக்கிய விருந்தினர்கள் வரும் போது அவர்களை வரவேற்று உபசரிக்கும் அதிகாரியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எரிக் (38) என்பவர் இருந்து வருகிறார். மேலும் இவர் ஆரோவில் நிர்வாக குழுவில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

    இவருக்கும், அங்கு பணி புரியும் வடமாநிலத்தை சேர்ந்த சுனித் என்பவருக்கும் வேலை தொடர்பாக கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சுனித்தை எரிக் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் எரிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×